- ருத்ரா இ பரமசிவன்
பொருள் உரை:
தலைவி தன் காந்தள் மலர் ஒத்த மெல்லிய விரல்களால் கோதி கோதி
தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்இருக்கும் அந்த
கூந்தற் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள். அந்த கூந்தலைப்போலவே அலை அலையாய்
அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது
"ஒரு மெல்லிசையை இழையவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று
அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும்
ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக"
என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
காந்தள் நெகிழும் கடிவிரல் ...
காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"
காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"
பொருள் உரை:
தலைவி தன் காந்தள் மலர் ஒத்த மெல்லிய விரல்களால் கோதி கோதி
தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்இருக்கும் அந்த
கூந்தற் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள். அந்த கூந்தலைப்போலவே அலை அலையாய்
அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது
"ஒரு மெல்லிசையை இழையவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று
அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும்
ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக"
என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.
______________________________________________________
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:
Post a Comment