tag:blogger.com,1999:blog-9219031660169845470.post2344071271449902743..comments2024-03-26T20:33:06.925-07:00Comments on மின்தமிழ் மேடை: வெள்ளாடை வேந்தர் பிட்டி தியாகராயர்Dr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9219031660169845470.post-7782542875703478522016-04-27T23:12:05.338-07:002016-04-27T23:12:05.338-07:00வேளாளர்களின் வரலாற்றை, திரும்ப திரும்ப ஏன் மறைக்க ...வேளாளர்களின் வரலாற்றை, திரும்ப திரும்ப ஏன் மறைக்க நினைக்க வேண்டும் என புரியவில்லை. வரலாற்றை திரித்து ஏன் திரும்ப திரும்ப எழுதி வருகின்றீர்கள் என தெரியவில்லை. முன்பே ஒரு முறை சென்பகராமன் பிள்ளை குறித்து தவறான தகவலை பதிவிட்டீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். இந்த தவறுகளை கேட்டால், மனது துன்பப்படுகிறது என்று எழுதி பரிதாபத்தை காட்டுகின்றீர்கள். இது சரியா? இனியாவது வரலாற்றை எழுதும் போது, முழுதாக புரிந்து, தெரிந்து கொண்டு எழுதினால், வரவேற்கப்படுவீர்கள். <br /><br />இன்று நீங்கள் தெலுங்கருக்காக எழுதியுள்ள 'பிட்டி தியாகராயர்' என்ற கட்டுரையில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக எழுதியது முழு பொய். /ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த நகராட்சிப் பள்ளியில் முதன்முறையாக இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் இப்பெருமகனார். / இவரைப் பார்த்துத்தான் கர்ம வீரர் காமராசர் இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் என்பது அப்பட்டமான வரலாற்று மறைப்பு.<br /><br />சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டா பிட்டி தியாகராயர், மாநகராட்சியின் பணத்தைக் கொண்டு சில பள்ளிகளை திறந்தார், அதில் மதிய உணவு திட்டதை நகலெடுத்து (திருடி) அதை தனக்கு சொந்தமாக்கி கொள்ள உங்களைப் போன்றோரை பயன்படுத்தி கொள்ளப் பார்க்கிறார் என்பதான் உண்மை. <br /><br />தமிழகத்தில் தில்லையாடி வேதியம் பிள்ளை என்பவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? திரு. வேதியம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிய வேளையில், அவர்கள் தமிழின் மேல் கொண்ட பற்று காரணமாக, தில்லையாடியில் பள்ளி ஒன்றை தொடங்கினார். அக்காலத்தில், குழந்தைகளை ஆடு, மாடு மேய்த்தால், மதியம் ஒரு வேளை சாப்பாடு கிடைக்கும். இதனால், வேதியம் பிள்ளை தொடங்கிய பள்ளிக்கு குழந்தைகள் வரவில்லை. சூச்சமத்தை புரிந்து கொண்ட வேதியம் பிள்ளையாவர்கள், மதிய உணவு கொடுத்ததால், பள்ளிக்கு குழந்தைகளில் வருகையும் பெருகிறது. <br /><br />திரு. காமராசர், முதல்வராக இருந்த போது, பல பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கினார். ஆனால், இங்கும் குழந்தைகள் வருகை சிறிய அளவே இருந்தது. சிலரின் அறிவுரையால், வேதியம் பிள்ளை அவர்களின் தந்திரத்தை தெரிந்து கொண்ட காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கினார். குழந்தைகளும் பள்ளிக்கு வந்தார்கள். இதுதான் தமிழக பள்ளியில் மதிய உணவு வந்த கதை. <br /><br />வரலாறு இப்படியிருக்க, எதற்காக 'பிட்டி தியாகராயர்' தான் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்ததாக எழுத வேண்டும். வரலாற்றை திரிக்கவா?<br /><br />திரு. வேதியம் பிள்ளை அவர்களின் மகனான திரு. தச்சனா மூர்த்தி, வயது 86, அவர்களை நேரில் சந்தித்து கிடைக்க பெற்ற தகவல் இது. சிறந்த தமிழ் தொண்டரான வேதியம் பிள்ளையின் வாரிசுகள், எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமல், இன்றும் எளிமையாக குடும்பம் நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. <br /><br />வேதியம் பிள்ளை அவர்கள் தாயுமானவர் அடிகளார் வாரிசு வழி வந்தவர் என்பது மேலும் சிறப்பு. இது மட்டுமல்ல, காந்தியடிகளுக்கு தமிழை கற்று கொடுத்து தமிழில் கையெழுத்து போட வைத்தவரும் அவரே. அத்தோடு, திருக்குறளின் மேன்மையை காந்திக்கு உணர்த்தியவரும் அவரே. <br /><br />தமிழகத்தில் தில்லையாடியில் பிறந்தவர் வேதியம் பிள்ளை. 13 வயதில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று, அடித்தட்டு வேளைகளை செய்தவாறு மேற்படிப்பை மேற்க்கொண்டவர். இவர் தாயுமானவர் அடிகளார் வழி வந்தவர் என்பது சிறப்பு. - அக்னி<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/10588155706861257359noreply@blogger.com