Wednesday, January 13, 2016

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 8


-செல்வன். 

பேரா யூகோ: அவர்களது ஓட்டு விடுதலை சிறுத்தைகளுக்கு விழுகிறதா? கடந்த தேர்தலை எடுத்துக்கொள்வோம். 2011ல் விடுதலை சிறுத்தைகள், திமுக, புதிய தமிழகம் எல்லாமே ஓரணியில் இருந்தன. வட மாவட்டங்களில் வன்னியர்கள் ஒன்று திமுகவில் இருக்கிறார்கள் அல்லது பாமகவில் இருக்கிறார்கள், தலித்துகள் விடுதலை சிறுத்தைகளில் இருக்கிறார்கள். மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களும் இதன் அடிப்படையில் வாக்களித்திருந்தால் நீங்கள் குறைந்தது 2 அல்லது 3 தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டுமல்லவா?

சன்னா: ஆம்

பேரா யூகோ: ஆனால் நீங்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை

சன்னா: ஓட்டு வங்கிகளை பற்றி பேசினால், குறிப்பாக 2011 என எடுத்துக்கொண்டால் பலரும் நினைப்பது என்னவெனில் பாமக ஒட்டுமொத்தமாக வன்னியர் கட்சி என நினைக்கிறார்கள். ஆனால் வன்னியர்கள் அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்து பாமகவை ஆதரிக்கவில்லை. இது முக்கியம். வன்னியரில் இருவகை உண்டு. ஒன்று தமிழ் பேசும் வன்னியர். இன்னொன்று தெலுங்கு பேசும் வன்னியர். தமிழ் வன்னியர்க்ள் ராமதாசுடன் இருக்கிறார்கள். தெலுங்கு பேசும் வன்னியர்கள் தனியான அரசியல் சக்தியாக இருக்கிறார்கள். தெலுங்கு பேசும் அக்கினி குல வன்னியர்கள்- நாயுடுகள், ரெட்டியார்கள் இதர தெலுங்கு பேசும் சாதிகளுடன் இணைகிறார்களே ஒழிய ராமதாசின் தலைமையை ஏற்கவில்லை. இது ஒன்று. அடுத்து திமுகவில் உள்ள தெலுங்கு பேசும் வன்னியர்க்ளை எடுத்துக்கொண்டால், அதிகாரம் தெலுங்கு பேசும் வசதியான வன்னியர் வேட்பாளர்களிடையே உள்ளது. அதனால் தான் அவர்கள் அக்கட்சியில் இருக்கிறார்கள். 2011ல் தேமுதிக திமுகவின் தெலுங்கு வன்னியர் ஓட்டை பிரித்தது. அத்துடன் பாமகவின் வன்னியர் ஓட்டும் குன்றியது. இந்த சூழலில் தெலுங்கு பேச்ம் வன்னியர் விடுதலை சிறுத்தைகளுடன் சேரவேண்டும் என்ற அவசியம் இல்லையே? மேலும் பாமகவில் உள்ள தமிழ் பேசும் வன்னியரும் விடுதலை சிறுத்தைகளை முழுமையாக ஆதரிக்கும் வாய்ப்பு குறைவே. நேற்றுவரை அவர்களை எதிர்த்த ஒருவர் இன்று அவர்களுக்கு எதிராக நிற்கையில், அவரை அவர்களுக்கு சமமாக பார்க்கமுடியாமல் அவர்கள் தம் ஆதரவை அளிப்பதில்லை.

தலித்துகளை எடுத்துக்கொண்டால் ஓட்டுபோடுவது தம் கடமை என கருதுகிரார்களே ஒழிய தம் இனத்தை சேர்ந்த இன்னொரு தலித்துக்கு ஓட்டுபோடுவதே நேர்மை என அவர்கள் கருதுவதில்லை. அதனால் அவர்களது ஓட்டு பல கட்சியினரிடையே பிரிகிறது. தலித் ஓட்டு தலித் அல்லாதாருக்கு விழுகிறது. ஆனால் தலித் அல்லாதார் ஓட்டு தலித்துகளுக்கு விழுவதில்லை. இந்த பிண்ணனியிலேயே விடுதலை சிறுத்தைக்ள் பத்து தொகுதிகளில் அடைந்த தோல்வியை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் ஓட்டும், இடைநிலை சாதி ஓட்டும் விடுதலை சிறுத்தைகளுக்கு விழவில்லை. என்ன நடந்திருக்கவேன்டுமெனில் அக்கட்சி தலைவர்கள் தம் தொண்டர்களுக்கு சரியான பயிற்சி கொடுத்திருக்கவேண்டும் என்பதே. அப்படி நடந்திருந்தால் திமுக கூட்டணியின் தோல்வி தவிர்க்கபட்டிருக்கலாம்
பேரா யூகோ: நான் இதிலுள்ள உண்மையை ஒப்புகொள்கிறேன். ஆனால் அதே போன்ற பயிற்சியை விடுதலை சிறுத்தைகளும் கொடுக்கவேண்டும் என கருதுகிறேன். ஏனெனில்..

சன்னா: உண்மை. அம்மாதிரி பயிற்சிகள் தேவைபடுகின்றன

யூகோ: உதாரணத்துக்கு சோழவந்தான் தொகுதியில், கள அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் அதிமுகவுக்காக பணியாற்றினார்கள். காரணம் கேட்டதற்கு அத்தொகுதியின் பாமக வேட்பாளர் பள்ளர் என்றும் அதிமுக வேட்பாளர் பறையர் என்பதால் தம் தொகுதியில் பறையருக்கு வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கருதுவதாகவும் கூறினார்கள். பலர் தம் கூட்டணி வேட்பாளரை ஆதரித்தாலும் மற்றவர்கள் எதிர்கட்சியான அதிமுகவையே ஆதரித்தார்கள்

சன்னா: நீங்கள் சொன்னதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் அப்பயிற்சி அவசியமாகிறது. சாதிய உணர்வு தலைதூக்குகையில் அனைத்து இடங்களிலும் இம்மாதிரி பிரச்சனைகள் எழுகின்றன. உள்ளூர் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் அரசியல் பிரச்சனைகள் இருக்கையில் கட்சி தொண்டர்கள் எதிரணி வேட்பாளருக்கு சாதகமாக வேலைபார்க்கும் வாய்ப்புகள் அதிகம். நாம் இம்மாதிரி பயிற்சியை வருங்காலத்தில் கொடுக்கவேண்டும் என்பதையும், நம்மிடம் அப்பகுதியில் குறைகள் உள்ளன என்பதையும் மறக்க கூடாது. விடுதலை சிறுத்தைகளில் ஜாதி இல்லை என நாம் கூற முடியாது. அம்மாதிரி எதிர்பார்க்கவும் முடியாது என்பதால் விடுதலை சிறுத்தைகளிடமும் இவ்விஷயத்தில் மாற்றம் வரவேண்டும்

பேரா யூகோ: சரி..உங்கள் கட்சி இப்போது ஒரு அரசியல் கட்சியாகிவிட்டது. தலித் ஓட்டுக்களை மட்டுமே வைத்து எந்த தலித் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது அல்லவா?

சன்னா: நிச்சயமாக முடியாது என உறுதியாக கூறலாம்






---..(திரு. சன்னா அவர்களின் நேர்காணல் தொடரும்...)..---


 
   
செல்வன்

 
holyape@gmail.com





 

 

1 comment:

  1. நான் ஒரு தலித் ஆக சக தலித்துக்கு ஓட்டுப்போடனும்-ங்கறார் சன்னா. ஆக தலித்தாக எந்த பறையன் உணர்கின்றானோ அவன் கண்டிப்பாக ஓட்டு போடுறான்.

    அந்த தலித்துகளின் ஓட்டு விழுந்துகொண்டு தான் இருக்கு. அந்த ஓட்டுக்களை வைத்து வி.சி.க எதையும் செய்ய முடியாது என்பதைத்தான் கடந்த இரண்டு தேர்தல்களும் அறிவுறித்தி இருக்கு. அதை நீங்கள் உணர்ந்ததாக தெரியவில்லை

    ReplyDelete